கோர விபத்தில் முதியவர் பரிதாபமாக பலி!!

636

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளையில் இன்று செவ்வாய்க்கிழமை (21.10.2025) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கல்முனை வீதியில் களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று களுதாவளை பொது நூலகத்திற்கு அருகாமையில் பிரதான வீதியை கடந்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த முதியவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டிப்பர் சாரதி களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் களுதாவளை பகுதியை சேர்ந்த 70வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஸ்தலத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.