சுவீடனில் இருந்து இலங்கைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

364

சுவீடனில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த ஒரு பெண், தனது விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அவரிடம் பணம் இல்லாமல் கதிர்காமம் பகுதியில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை வந்த அமிரா இங்கா மேரி டேவி என்ற பெண், கதிர்காம ஆலயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

பக்தர்கள் வழங்கும் பழங்கள் மற்றும் உணவுகளை உண்டு வாழ்வதாக தெரியவந்துள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் நபர்களால் பாதிக்கப்பட்டு அவர் தனது பணத்தை இழந்துள்ளார்.

சுவீடனில் மருத்துவமனையில் பணிபுரியும் இந்தப் பெண், தன்னிடம் பணம் அல்லது கையடக்க தொலைபேசி இல்லாததால், நாடு திரும்ப உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.