ஆட்டிறைச்சிக் கறியில் மாத்திரைகள் : தப்பிய கணவனை தூக்கிட்டு கொன்ற மனைவி!!

1124

மட்டன் குழம்பில் வயாக்ரா மாத்திரை கலந்து கொடுத்து கணவனைக் கொலை செய்ய முயன்ற நிலையில், அந்த முயற்சி தோல்வியடைந்ததால்,

மதுவில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைக் கலந்து கொடுத்து, மயங்கிய கணவனை தூக்கில் தொங்கவிட்டு மனைவி கொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூரக் கொலைக்குப் பின்னால் கள்ளக்காதல், பாலியல் தொழில் தொடர்புகள் மற்றும் மருந்து மாத்திரை மாபியா உள்ளிட்ட பல்வேறு பின்னணிகள் உள்ளன என்று போலீசாரின் விசாரணையில் வெளிவந்துள்ளது.

கரீம்நகர் மாவட்டம் சத்பகிரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (35) டிரைவராகப் பணியாற்றி வந்தார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த மவுனிகா (30)வைக் காதலித்து கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஒன்பது மாதங்களாக மவுனிகா பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அறிமுகமான அஜயுடன் கள்ள உறவு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி நேரம் கழித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அதே சமயம் பண தொடர்பான காரணங்களால் சுரேஷ் தனது மனைவியை அடிக்கடி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மவுனிகா தனது கணவரை கொல்ல தீர்மானித்தார். தனது பாலியல் தொழில் உறவினரான ஜாவாவுக்கு இதை தெரிவித்துள்ளார். பின்னர் சந்தியா என்ற தொழிலாளி மூலமாக மருந்து முகவர் சிவகிருஷ்ணா அறிமுகமானார்.

அவர்களின் யோசனையின்படி புதிய திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி 15 வயாகரா மாத்திரைகள் வாங்கி மட்டன் குழம்பில் கலந்து சுரேஷுக்கு கொடுக்க முயன்ற போது மட்டன் குழம்பில் அசாதாரண வாசனை இருந்ததால் அவர் மட்டன் குழம்பைத் தவிர்த்து விட்டார். இதனால் முதல் முயற்சி தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 17ம் தேதி சிவகிருஷ்ணாவின் ஆலோசனையின்படி, தூக்க மாத்திரைகள் அதிகளவில் மதுவில் கலந்து கொடுக்கப்பட்டது. மயக்கமடைந்த சுரேஷை புடவையால் கட்டி தூக்கில் தொங்கவிட்டு மவுனிகா கொலை செய்துள்ளார்.

பின்னர் தனது கணவர் இறந்துவிட்டதாகக் கூறி, உல்லாசத்தின் போது மயங்கி விழுந்ததாக தனது தாயாரிடம் நாடகம் ஆடியுள்ளார். மருத்துவமனையில் சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்ததும், போலீசார் சந்தேகம் கொண்டு விசாரணை நடத்தினர்.

இதில் திட்டமிட்டு கள்ளக்காதலனும் பாலியல் தொழிலாளிகளும் மருந்து முகவரும் சேர்ந்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மவுனிகா, அஜய், சிவகிருஷ்ணா, சந்தியா, தேவதாஸ் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.