பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

613

பலாங்கொட, பின்னவல பொலிஸ் பிரிவின் வளவே அத்தர பகுதியில் சுரங்கத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 26 வயதுடைய கே.ஜி. நதீக சாரதா குணதிலக என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பல்கலைக்கழக படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை பலாங்கொட ஆதார மருத்துவமனையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜயதிலக தெரிவித்தார்.

இளைஞனின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.