
புத்தளம் – கல்லடி பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04.11.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் தனிப்பட்ட தேவைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்றுக்கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





