வவுனியாவில் மாணவர்களின் மாபெரும் ஓவியக் கண்காட்சி!!

1177

வவுனியா கிட்ஸ் கிரியேட்டிவ் ஆட்ஸ் சென்டர் வவுனியாவில் முதல் முறையாக நடாத்தும் மாணவர்களுக்கான மாபெரும் ஓவியக் கண்காட்சி நவம்பர் 08ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை வவுனியா மாநகரசபை உள்ளக அரங்கில் இடம்பெற்றவுள்ளது.

மாணவர்களின் ஓவியத் திறமையை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கும் ஓவியம் வரைவதில் மாணவர்களின் நாட்டத்தை ஊக்குவிப்பதற்கும் இவ் ஓவியக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இவ் ஓவியக் கண்காட்சியில் பெற்றோர் உட்பட அனைவரும் வருகைதந்து மாணவர்களின் கலைத்திறமையை ஊக்குவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு 0773414343