மாமியாருடன் சண்டை : ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!!

487

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான இளம் ஆசிரியை தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சுகிராமத்தை சேர்ந்த மகேஷ் (34), மும்பையில் கால் சென்டரில் வேலை பார்த்த போது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த லேகா (32) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 2 மகன்கள் உள்ளனர்.

பின்னர் மகேஷ் சத்தீஸ்காரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பெற, லேகா கணவரின் வீட்டில் தங்கி அருகிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருடன் கணவரின் தாயாரும் வசித்து வந்தார்.

இந்நிலையில், வீட்டு வேலைகளை சரியாக செய்யவில்லை என்ற காரணத்தால் மாமியார் லேகாவை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட லேகா, நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டிலேயே சேலையால் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துள்ளார்.

தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.