உயர் தரப் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் உள்ளிட்டோர் பயணித்த பேருந்து விபத்து : அறுவர் மரணம்!!

1444

தலாவ விபத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு : அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 40 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.