
உயர்தரப் பரீட்சை பதற்றம் காரணமாக கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள உள்ள ஒரு பாடசாலையின் மூன்றாம் மாடியிலிருந்து மாணவியொருவர் குதித்துள்ளார்.
இன்று பிற்பகல் 19 வயது உயர்தர மாணவி ஒருவர் பாடசாலை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவையைச் சேர்ந்த இந்த மாணவி, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகின்றார்.
சம்பவம் உயிரியல் வினாத்தாள் தொடங்குவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவி விழுந்த இடம் கார்பட் செய்யப்பட்ட பகுதியாக இருந்ததால், உயிர் தப்பியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவி பரீட்சையை எதிர்கொள்வதில் கடுமையான மனஅழுத்தத்தை அனுபவித்து வந்ததாக தெரியவந்துள்ளது.
அவரின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களிலும் இந்த தகவலை உறுதிப்படுத்தப்படுத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





