இலங்கையில் இரண்டு முதல் மூன்று மில்லியன் தெரு நாய்கள்!!

312

இலங்கையில் இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரையில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை விலங்குகள் நலச்சங்கம் எச்சரித்துள்ளது.

நாய்களின் அதிகரிப்பால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250,000 தெரு நாய்க்கடி சம்பவங்கள் பதிவாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெண் நாய்கள் வருடத்துக்கு இரண்டு முறைகள் குட்டி ஈனுவதால் தற்போது இலங்கையில் எட்டு மனிதர்களுக்கு ஒரு தெருநாய் என்ற சதவீதத்தில் அதன் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக விலங்கு நலன் மூலம் சமூகப் பாதுகாப்பிற்கான கண்டிச் சங்கத்தின் செயலாளர் சம்பா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.