
பணத்திற்காக விபச்சாரத்தில் தள்ளப்பட்டேன் என்று நடிகை சுவேத பாசு கண்ணீர் மல்க கூறியுள்ளார். ஹைதராபாத் நட்சத்திர ஹொட்டலில் நடத்திய விபச்சார வேட்டையில் முன்னணி நடிகை கைது செய்யப்பட்டதாக பொலிசார் அறிவித்தனர்.
ஹொட்டலில் விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல் வந்ததாகவும், அதன் பேரில் அங்கு சோதனை நடத்தியபோது தொழில் அதிபருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடிகையை கையும் களவுமாக பிடித்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
தற்போது விபச்சாரத்தில் கைதான நடிகை ஸ்வேதா பாசு என தெலுங்கு இணையதளங்கள் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளன.
குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் பட உலகில் அறிமுகமான ஸ்வேதா பாசு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளார். தெலுங்கு படங்களில் அதிக அளவில் நடித்துள்ள சுவேதா, தமிழில் ராரா, ரகளை, சந்தமாமா படங்களில் நடித்துள்ளார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன்னர் விபச்சர வழக்கில் நடிகை ஸ்வேதா பாசு மற்றும் விபச்சார புரோக்கர் பாலுவும் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்பின் பெண்கள் மறுவாழ்வு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டது ஏன் என்பது பற்றி ஸ்வேதா பாசு பேசுகையில், திரையுலக வாழ்க்கை என்பது எனக்கு சரியாக அமையவில்லை, தவறான படங்களை தெரிவு செய்து நடித்தேன். எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது.
மேலும் சில நல்ல விடயங்களுக்காக பணம் தேவைப்பட்டது. ஆனால் எல்லா கதவுகளும் மூடப்பட்ட நிலையில், விபச்சாரத்தில் ஈடுபட்டால் நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்லி என்னை அதில் தள்ளிவிட்டனர்.
அப்போது எனக்கு வேறு வழியும் தெரியவில்லை. விடுபடவும் முடியவில்லை. என் பிரச்சினை யாருக்கும் புரியவில்லை. என்னைபோல் பல பெண்கள் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்கிறார்கள் என பேட்டியளித்துள்ளனர். இவரது இந்த விளக்கம் தெலுங்கு இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது





