கார் மோதி உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் பலி!!

311

மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

திம்புலாகல – மஹியங்கனை பிரதான வீதிக்கு, குறுக்கு வீதி ஒன்றிலிருந்து சிறியரக உழவு இயந்திரம் திடீரென ஏறியமையால் , பிரதான வீதியில் இருந்து வந்த கார் , அதனுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.