பேருந்து நடத்துனர் தவறி விழுந்து பரிதாபமாக மரணம்!!

245

திருகோணமலை- தம்பலகாமம் பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பிரதான வீதி அருகில் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் நடத்துனர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாலம்போட்டாறு கண்டி திருகோணமலை வீதியில் உள்ள கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு மீண்டும் பேருந்தில் ஓடி சென்று ஏறிய போது தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரது தலை அடிபட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவருகிறது.

இவ்வாறு உயிரிழந்த பேருந்து நடத்துனர் திருகோணமலை 5ம் கட்டை பகுதியை சேர்ந்த லலித் குமார வயது (41) குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.