
சிகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – ஹபரண வீதியில் திகம்பதஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹபரண நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், அதே திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதேநேரம், பின்னால் வந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு எதிர் திசையில் வந்த கார் குறித்த நபர் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உட்பட மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் திகம்பதஹ பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய, காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





