
காலி – பலப்பிட்டிய கல்வி பிரிவுக்குட்பட்ட கந்தேகொடை மகா வித்தியாலத்தில் உள்ள பாதுகாப்பற்ற வடிக்கானுக்குள் விழுந்ததில் மாணவன் ஒருவனின் சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
வதுகெதர, குருந்துவத்தை பகுதியைச் சேர்ந்த , கந்தேகொடை மகா வித்தியாலத்தின் 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே இச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையில் உள்ள பாதுகாப்பற்ற வடிக்கானுக்குள் கடந்த மாதம் 27 ஆம் திகதியன்று விழுந்து, நோய்வாய்ப்பட்டதில் பலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் , அறுவை சிகிச்சை மூலம் மாணவனின் சிறுநீரகத்தை அகற்ற வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





