
குருநாகல் கொக்கரெல்ல மேல் வல்போல வீதியில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞர் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொக்கரெல்ல மேல் வல்போல வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த 33 வயதுடைய இளைஞர் மீது தென்னை மரம் விழுந்த நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





