பாடசாலை ஆரம்பிக்கும் திகதியில் மீண்டும் மாற்றம்!!

1445

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, நிலவும் மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளையும்,

காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.