இறம்பொடையில் பெரும் துயரம் : 15 பேர் பலி, 50 பேர் காயம், பலர் மாயம்!!

709

இறம்பொடை பகுதியில் பாரிய மண்சரிவில் சிக்குண்டு இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொத்மலை, ரம்பதகம அருகே 27 ஆம் திகதி இரவும் நேற்று (28) அதிகாலையும் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் 50 பேர் அந்த இடத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த இடத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.