
இலங்கைக்கு சுற்றுலா வந்த இடத்தில் மக்களோடு மக்களாக இணைந்து பேரிடர் மீட்புப் பணியில் வெளிநாட்டவர் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நாட்டில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு சென்ற டிட்வா புயலின் பாதிப்பால் முழு நாடுமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மண்சரிவிலும் வெள்ளத்திலும் , சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் மீட்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளமை கனவத்தை ஈர்த்துள்ள நிலையில், அவர் மீடுப்பு பணியில் ஈடுபடும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபடும் குறித்த வெளிநாட்டவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
இன்று திங்கட்கிழமை (01) காலை 9:00 மணி வரை 355 பேர் உயிரிழந்துள்ளதோடு, 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.





