வவுனியாவில் வெள்ளத்தில் சிக்கி பல கால்நடைகள் உயிரிழப்பு!!

63

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பல கால்நடைகள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தொடர்ச்சியான கனமழையால் குளங்கள் நிரம்பி வழிவந்து, வவுனியாவின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட பல கால்நடைகள் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில் பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள், கால்நடைகள் உயிரிழந்ததன் காரணமாக பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.