லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை : திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்!!

610

லண்டனில் இடம் பெற்ற கத்திக்குத்தில் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி ஒரு வருடமான நிலையில் இத துயரச்சப்பவம் இடம் பெற்றுள்ளது கடந்த 30 ஆம் திகதி இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .

இந்நிலையில் நேற்று 03 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கறுப்பின இளைஞர்கள் இக்கொலையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது .

சம்பவத்தில் 32 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் சம்பவம் தொடர்பாக லண்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .