
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுவதுடன், குறித்த குடும்பஸ்தர் திருகோணமலையில் வீடியோ கடையை நடாத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் திருகோணமலை அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதான செல்வநாயகம் சத்தியகுமார் குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார் . இந்நிலையில் இளம் குடும்பஸ்தரின் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.





