ஆசியாவை கதிகலங்க வைத்த பேரழிவுகள் : அச்சமூட்டும் பாபா வங்காவின் கணிப்புக்கள்!!

51

அண்மைய நாட்களாக இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகி வரும் காலநிலை மாற்றங்கள் எவரும் எதிர்பார்க்காத அளவு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

இயற்கையின் கோர தாண்டவத்தில் மனித, சொத்து மற்றும் பொருளாதார சேதத்தை குறித்த நாடுகள் கடுமையாக எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில், பாபா வங்கா, உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் குறித்து மேற்கொண்டுள்ள கணிப்புக்கள் பேசுபொருளாகியுள்ளதுடன் அவரின் கணிப்பின் படி தான் அனைத்தும் நடக்கின்றனவா என அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா பார்வையற்ற பெண்ணொருவர், எதிர்காலம் குறித்து பல நிகழ்வுகளை கணித்துள்ளதாகவும் அவரின் கணிப்புக்களில் ஆசியாவுக்கு பேரழிவு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, அவர் மேற்கொண்ட பல நிகழ்வுகள் அதேபோல நடக்காவிடினும் அதற்கு ஒத்த அல்லது தொடர்புடைய சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையே அவரின் கணிப்புக்களை ஆராய தூண்டுகின்றது.

அந்தவகையில், 1996 ஆம் ஆண்டு உயிர்நீத்த பார்வையற்ற பெண்ணொருவர் 2025ஆம் ஆண்டில் ஏற்பட போகும் பேரழிவுகளை கணித்தார் என கேட்கும் போது நமக்கு அவநம்பிக்கை ஏற்படும் அதேவேளை, சந்தேகத்தையும் எழுப்புகின்றது.

எனவே, அவரின் கணிப்பை ஆராயும் போது, குறித்த பெண், 2025ஆம் ஆண்டு ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு ஒரு மோசமான அழிவு ஏற்படும் என கணித்துள்ளார்.

அதன்படி, ஆசியாவில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து சுனாமி வரக்கூடும் அபாயம் உள்ளது என அவரின் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில், ஆசிய நாடான ஜப்பானில் ஒரு வாரத்திற்கு முன்னர் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியது. இதன்போது, கிட்டத்தட்ட 90,000 பேர் வெளியேற்றப்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு நில அதிர்வு அபாயம் அதிகமாக இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.

அதேவேளை, குறித்த நிலநடுக்கத்தின் போது குறைந்தது 23–33 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு செய்திகளில் கூறப்பட்டன. அதேசமயம், இலங்கை மற்றுமு் இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய டிட்வா புயலும் பதிவாகியிருந்தது.

இலங்கை காலநிலை வரலாற்றிலேயே சுனாமிக்கு பிறகு மிகப் பாரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்திய ஒரு அனர்த்தமாக இது பதிவு செய்யப்பட்டது.

2004 ஏற்பட்ட சுனாமியை விடவும் அதிகமான பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீட்பு பணிக்கு கூட சிரமங்களை ஏற்படுத்திய ஒரு பேரழிவு இந்த டிட்வா புயல்.

இத்தகைய, அனர்த்தங்கள் பதிவாகியிருக்கும் நிலையிலேயே பாபா வங்கா ஆசியாவுக்கு பேரழிவு ஏற்படும் என கணித்திருந்ததாக கூறப்படும் செய்தி பேசுபொருளாகியுள்ளது.

அத்துடன், மேலும், அவர் 5079 ஆம் ஆண்டு வரை நடக்க போகும் என மேற்கொண்டுள்ள கணிப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்படுவதுடன் சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.