
கிளிநொச்சியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு வடலிக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் (16) குறித்த நபர் காயங்களுடன் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பற்றாஇக்குள் கிடந்த நிலையில், மக்கள் சென்ற போது குற்றுயிரும் குலையுயிருமாக இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அவரை மீட்டபோது உடலில் அடிகாயங்கள் காணப்பட்டுள்ளது.
வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தி பனை மரத்தின் கீழ் குறித்த நபர் போடப்பட்ட நிலையில் பிரதேச வாசிகளால் மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





