பெற்றோரை கொன்று துண்டு துண்டாக வெட்டிய மகன் : மனைவியை பிரிய பணம் வழங்காததால் ஆத்திரம்!!

105

உத்தரப்பிரதேசத்தில் பெற்றோரை கொன்று உடலை மகன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் அம்பேஷ் என்ற பொறியாளர் தனது வீட்டை எதிர்த்து மாற்று மதத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அம்பேஷ் திருமணத்தை அவரது பெற்றோர்கள் கடைசி வரை ஏற்றுக் கொள்ளவில்லை, அத்துடன் உடனடியாக அந்த பெண்ணை விவாகரத்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் குடும்ப தகராறு அதிகரித்துள்ளது, இறுதியில் விவாகரத்து சம்மதித்த அந்த பெண் ஜீவனாம்சமாக ரூ.5 லட்சம் கேட்டுள்ளார்.

இந்த பணத்தை திரட்டுவதற்காக அம்பேஷ் தந்தையிடம் உதவி கோரியுள்ளார்.

பெற்றோரை கொன்று ஆற்றில் வீசிய மகன்

ஆனால் ரூ.5 லட்சம் தந்து உதவ தந்தை மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் சமையலறையில் இருந்த அரவை கல்லை எடுத்து தாய் பபிதா(60)வை முதலில் தாக்கியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை ஷியாம் பகதூரையும்(62) அதே கல்லால் அடித்து கொன்றுள்ளார். மேலும் தன்னுடைய தவறை மறைக்க வீட்டில் கேரேஜில் இருந்த வாளை(Saw) கொண்டு பெற்றோர் இருவரையும் துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் கட்டில் அதிகாலை நேரத்தில் ஆற்றில் வீசியுள்ளார்.

பின்னர் சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பெற்றோர் கோபத்தில் வீட்டை விட்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் சகோதரி வந்தனா பொலிஸாரில் புகார் அளிக்கவே, அம்பேஷிடம் பொலிஸார் நடத்திய விசாரணையின் இறுதியில் இருவரையும் அடித்து கொன்ற விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.