நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு!!

294

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைதுசெய்து முன்னிலைபடுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23.12.2025) உத்தரவிட்டுள்ளது.

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியமை காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர், விசாரணைக்காக இன்று முன்னிலையாக தவறியமை காரணமாகவே கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே இன்று (23) உத்தரவிட்டடுள்ளார்.