
முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த உயிரிழப்பு சம்பவம் கடந்த 21.12.2025 அன்று பதிவாகியிருந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் கவனயீனத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கான தீர்வினை மருத்துவமனை அதிகாரிகள் தர வேண்டும் என கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாவத்தை மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 29.12.2025 முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை முன்பாக இந்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அழகக கூட்டுறவு சங்கம் தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.
இவ்வாறான இழப்புக்கள் இனியும் நடைபெறாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தினை வலியுறுத்தும் இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.





