
வவுனியா அம்மாச்சி உணவகம் புணரமைப்பு பணிகளின் பீன் இன்று காலை (02.01.2026)மீண்டும் திறக்கப்பட்டது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி புணரமைப்பு பணிகளுக்காக கடந்தசில நாட்களாக பூட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் புணரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை மீண்டும் அது உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர, மற்றும் விவசாய திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.






