வீதியில் வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர் தாக்குதல் : பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

305

கடுவலை – கொள்ளுபிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த சம்பவம் நேற்று (12.01.2026) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் , சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தனது கையில் வைத்திருந்த ஆயுதம் போன்ற ஒரு பொருளைக் கொண்டு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனையடுத்து, வெலிக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சந்தேக நபரைத் துரத்திச் சென்று குறுகிய நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் தாக்குதலால் சுமார் 4 வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டவர் ராகமை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர் இன்று செவ்வாய்க்கிழமை (13) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.