
அரசாங்க ஊழியர்களுக்காக வழங்கப்படும் பண்டிகை கால முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக சுற்றறிக்கை வழிமுறைகளை வெளியிடுவதற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு பண்டிகை கால முற்பணங்களை செலுத்துவது தொடர்பான விதிகளின்படி, தைப்பொங்கல், ரமலான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நிகழ்வுகளுக்கும், புனித யாத்திரைகளுக்கும் (ஸ்ரீபாத யாத்திரை மற்றும் ஹஜ் யாத்திரை போன்றவை) அரச அதிகாரி ரூ.10,000/- முற்பணத்தைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றினை வட்டி இல்லாமல் 08 மாதாந்திர தவணைகளில் அல்லது தேவைப்பட்டால் முன்னதாகவே மேற்படி முற்பணத் தொகையை வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மேற்படி பண்டிகை கால முற்பணத் தொகையை ரூ.15,000/- ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.





