
பதுளையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயிலின் ஜன்னல் வழியாகத் தலையை வெளியே நீட்டி இயற்கைக் காட்சிகளை ரசித்தவாறு சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் விபத்திற்குள்ளாகியுள்ளார்.
ரயில் நிலைய உபகரணம் ஒன்றில் மோதி பலத்த காயமடைந்துள்ளார். இந்த விபத்து அம்பேவெல ரயில் நிலையத்தைக் கடந்த போது இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த வெளிநாட்டுப் பெண் உடனடியாக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற உடனே செயற்பட்ட அம்பேவெல ரயில் நிலைய அதிபர் மற்றும் ஊழியர்கள், 1990 சுவசரியே அவசர அம்புலன்ஸ் சேவையை வரவழைத்தனர்.
காயமடைந்த பெண்ணுக்குத் தேவையான முதலுதவிகளை வழங்கி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.





