முல்லைத்தீவில் வீதியில் உலரவிடப்பட்ட நெல்லால் விபத்து!!

248

முல்லைத்தீவு பிரதான வீதியில் சற்று முன் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

காயமடைந்தவர் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். வீதியில் நெல்லு உலர விடப்பட்ட நிலையில் தடுமாறிய நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வீதிகளில் நெல் உலர விடுவதால் விபத்துக்கள் ஏற்படும் என சமூக ஆர்வல்ர்கள் எச்சரித்திருந்தனர். வீதியில் நெல் உலரவிடும் பொதுமக்கள் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கபப்ட்டிருந்தது.

இந்நிலையில் விபத்து மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.