யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக பலி!!

247

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்றையதினம் (02.02.2026) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார். மயிலிட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரை இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.