ஐரோப்பாவில் இருந்து மனைவியுடன் இலங்கை வந்த நபர் பரிதாபமாக மரணம்!!

34

ஐரோப்பிய நாடான ஹங்கேரியாவில் இருந்து மனைவியுடன் இலங்கை வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிகிரியா-பிதுரங்கல வீதியில் காட்டு யானை தாக்கியதில் குறித்த வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 68 வயதான ஹங்கேரிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில், அந்த ஆணும் அவரது மனைவியும் சிகிரியா-பிதுரங்கல சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து சிகிரியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.