தென்னிலங்கையில் அதிசொகுசு மாளிகை அரசினால் பறிமுதல்!!

197

ஹம்பாந்தோட்டையில் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்கள் பெற்றதாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வலஸ்முல்ல, கடிகமுவ பகுதியிலுள்ள 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள மூன்று மாடி வீடு கொண்ட 14.1 பேர்ச் காணியை பணமோசடி தடுப்புச் சட்டத்திற்கமைய முடக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ஆம் திகதி முதல் 07 நாட்களுக்கு முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.