வங்காள விரிகுடாவில் பலவீனமடையும் காற்றழுத்த தாழ்வுநிலை : அடுத்த 24 மணித்தியாலத்திற்கு எச்சரிக்கை!!

432

இலங்கையின் வடகிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (24) பிற்பகல் 2 மணிக்கு வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையின் வடகிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்கும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலோடிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்கம் காரணமாக, கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், அத்துடன் மணிக்கு 50 – 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் கொந்தளிப்பாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.