கொழும்பு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்!!

38

கல்கிஸ்ஸை, இரத்மலானை கடற்கரைப் பகுதியில் இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைவிடப்பட்ட மீன்பிடி படகொன்றில் இருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

24 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.