இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள விசேட அரச விடுமுறை தினங்களில் நடைமுறைக்கு வரும் தடை!!

416

இலங்கையில் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, மார்ச் 18, 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட விடுமுறையானது அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தார்.

அதன்படி அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற சேவைகளும் இந்த விடுமுறை காலப்பகுதியில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற பயணங்கள் மற்றும் எரிபொருள் விரயத்தைக் குறைக்கும் நோக்கில், அனைத்து அரச நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தனியார் நிறுவனங்களும் இதேபோன்ற விடுமுறை அல்லது வேலை நேர ஒழுங்கமைப்புகளை பின்பற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதாரத் துறை (வைத்தியசாலைகள்) துறைமுகங்கள் நீர் வழங்கல் சேவை சுங்கத் துறை போன்ற துறைகளுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிப்பானது பின்வரும் அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே மேலதிக வகுப்புகள் தொடர்பான குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.