ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞன் : நண்பியுடன் சென்றபோது துயரம்!!

806

இத்தாலியின் மிலான் நகரில், நேற்று முன் தினம்(21) இரவு, சிவப்பு போக்குவரத்து விளக்கை கவனக்குறைவாக கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இலங்கையர் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார்சைக்கிள் பயணித்த இலங்கையைச் சேர்ந்த மிதும் சந்தீப பெரேரா (23 வயது) மற்றும் எலிசா தியோடோரா (20 வயது) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்தில் பலியானவர்கள், இத்தாலியின் டஸ்கனி (Tuscany) பிராந்தியத்தில் உள்ள லூக்கா (Lucca) நகரின் கப்பானோரி (Capannori) பகுதியில் வசித்து வந்த 23 வயதான இலங்கை இளைஞர் மிதும் சந்தீப பெரேரா குரணகே என்பவரும் ,

மிலன் நகரின் ‘Locate Triulzi’ பகுதியில் வசித்து வந்த, ருமேனிய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயதான இத்தாலியப் பெண் எலிசா தியோடோரா ட்ரான்கா என்பவருமாவர்.

இவர்கள் இருவரும் பயணித்த அதிவேக மோட்டார் சைக்கிள் ஒன்று, ஒரு டாக்ஸியுடன் மோதியபோது இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளையும் அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.