
600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம்.ஜயவர்தன அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விசேட விலை குறைப்புத் திட்டத்தின் கீழ் உள்ள பொருட்கள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம்.
பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் அதன் எதிரொலியாக சில பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் குறித்த அறிவிப்பானது மக்களுக்கு நிம்மதியளிக்கும் என நம்பப்படுகிறது.





