பட்டப்பகலில் வீதியின் நடுவில் மனைவியை கொலை செய்த கணவன்!!

34

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், பட்டப்பகலில், சாலையின் நடுவில் தன் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற நபர் ஒருவர், அவர் மீது காரையும் ஏற்றிச் சென்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தன் மனைவியான சாஹேலியுடன் (26) காரில் பயணித்துகொண்டிருந்துள்ளார் அக்‌ஷய் என்னும் நபர்.

Balurgi கிராமத்தின் அருகே நெடுஞ்சாலையில் காரை நிறுத்திய அவர், நடுரோட்டில் வைத்து தன் மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதம் ஒன்றால் அறுத்துள்ளார்.

அத்துடன், அவர் மீது காரையும் ஏற்றியுள்ளார் அக்‌ஷய். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கரத்தை பார்த்தும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்களாம் அந்த வழியாக பயணித்துக்கொண்டிருந்தவர்கள்.

அக்‌ஷய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது இந்த பயங்கர முடிவுக்கு, தவறான உறவு காரணமாக இருக்கலாம் என கருதும் பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.