
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவியான ஷாருணியா பழனியாண்டி ஆங்கில மொழி மூலமான வர்த்தக பிரிவில் மாவட்டமட்டத்தில் முதலாவது நிலையினை பெற்று சித்தியடைந்துள்ளார்.
க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் நேற்றயதினம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் குறித்த மாணவி வர்த்தக பாடப்பரப்பில் மூன்று பாடங்களிலும் A சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலையினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
அத்துடன் அதே பாடசாலையை சேர்ந்த மாணவிகளான குகன்ஜா ஜெநந்தராஜா இரண்டாம் நிலையினையும், அஸ்மிதா மெய்யழகன் மாவட்ட மட்டத்தில் நான்காம் நிலையினையும் பெற்றுள்ளனர்.





