
நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய ‘டித்வா’ புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (09.04.2026) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அத்துடன், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக பல மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தாண்டு காலத்தில் இலங்கை ரயில்வே திணைக்களத்தில் இந்த அறிவிப்பு வடக்கு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





