ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் : தீவிரப்படுத்தப்படும் விசாரணை!!

28

நோர்வூட் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (09.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டதாக நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

நோர்வூட் – பொககவந்தலாவ, மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள நோர்வூட் பாலத்திற்குக் கீழே ஆற்றில் சடலம் மிதப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

எனினும், சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும், ஹட்டன் பொலிஸ் பிரிவின் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.