வவுனியா பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் நடைபெற்ற இரத்ததான முகாம்!!

314

வவுனியாவில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தில் இரத்ததான முகாம் நேற்று (15.09) காலை 9.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை நடைபெற்றது.

பகவான் ஸ்ரீ சத்ய சாயியின் பக்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் தொடர்ச்சியாக பல சமூக அமைப்புக்கள்,சாரணர் சமூகம், தனியார் நிறுவனங்கள், பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையம், கல்வி நிறுவனங்கள் இரத்த தான நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமை பாராட்டுக்குரியது.

-நன்றி பூர்வீகம்-

1 2 3 4