
தமிழ் நாட்களில் சித்திரை மாதத்தின் முதல் நாளன்று தமிழ்ப் புத்தாண்டாக கருதப்படுகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் ஏப்ரல் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
பராபவ தமிழ்ப் புத்தாண்டு (14.4.2026, செவ்வாய்) சதயம் நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் பிறக்கிறது. இந்த ஆண்டு மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும்.
சித்திரை மாதத்தில் உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். வருமானம் சுமாராக இருந்தாலும், பொறுமையும், பொறுப்புடன் செயல்படுதலும் அவசியம்.

மேஷம் : தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றி வருடமாக இருக்கப் போகிறது. குருவின் பார்வை உங்கள் மீது இருப்பதால், இந்த ராசிக்கு சாதகமாக பலன்கள் கிடைக்கலாம், தடைப்பட்ட காரியங்கள் இப்போது கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பராபவ ஆண்டு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். மேலும் வியாபாரம் செய்யும் இந்த ராசிக்காரர்கள் நல்ல லாபத்தை பெறலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சில முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறலாம்.
மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பராபவ ஆண்டு சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கும். நீங்கள் எடுக்கப் போகும் சில முடிவுகள் நிதானமாக இருக்க வேண்டும். வேலையில் பணிச்சுமை கூடலாம், எனினும் சில அங்கீகாரத்தை பெறுவீர்கள்.
கடகம் : கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியின் தாக்கம் முடிந்துள்ளதால், இந்த ஆண்டின் மிக மிக சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வெளிநாட்டுப் பயணம் செல்ல வாய்ப்புகள் அமையும்.
சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். கணவன்-மனைவி இடையே புரிதல் மேம்படும்.
கன்னி :கன்னி ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். கண்டச்சனியின் தாக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக செலுத்த வேடனும். தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆண்டின் இறுதியில் நிலைமை சீராகும்.
துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு ஆண்டாக அமையப் போகிறது. தொட்டது அனைத்தும் துலங்கும். நீண்ட நாள் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் உண்டாகும்.
விருச்சிகம் :விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாகனத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பிறரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். ஆன்மீகத்தில் உங்களுக்கு நாட்டம் அதிகரிக்கும்.
தனுசு : தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் வாங்கும் யோகம் உங்களுக்கு கிடைக்கலாம்.
மகரம் : இந்த ஆண்டு ஏழரை சனியின் பிடியிலிருந்து முழுமையாக விடுபடுவதால் மகர ராசிக்காரர்களுக்கு இனி மன நிம்மதி கிடைக்கக்கூடும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் அமையும்.
கும்பம் : கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு முதல் நிதானம் தேவைப்படும். தேவையற்ற அலைச்சல் இருக்கும், ஆனால் வருமானத்திற்கும் எந்த பஞ்சமும் இருக்காது. பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மை பயக்கும்.
மீனம் : மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கப் போவதால், இனி வரும் காலம் கவனமாக இருக்க வேண்டும், நற்பலன்கள் கிட்டும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் வந்து நீங்கும்.





