தென்னிலங்கையில் கோர விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!

65

களுத்துறை, வரக்காகொட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர், தியாகடுவ பகுதியை சேர்ந்த 24 வயதுடைய தாரக்க குமார விஜேசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் ஹொரணையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்து வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மத நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு மீண்டும் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வரகாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.