சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான தகவல்!!

31

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் இன்று (25.04.2026) எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,312 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

முதலாம் இணைப்பு : சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (25.04.2026) தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு போர் ஆரம்பமான காலப்பகுதியில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலரை கடந்திருந்தது.

இதனை தொடர்ந்து பாரிய சரிவை தங்கத்தின் விலை சந்தித்திருந்தது. இவ்வாறான சூழலில் தற்போது மீண்டும் அதிகரித்து தற்போது ஒரு அவுண்ஸ் தங்கம் 4,708 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது.

அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளி 75.69 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் இன்று இலங்கையிலும் தங்கவிலை வீழ்ச்சியை பதிவு செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.