இன்று முதல் நாடுமுழுவதும் கடும் வெப்பநிலை எச்சரிக்கை!!

181

நாட்டின் பல பகுதிகளில் இன்று (30.04.2026) முதல் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமத்திய, கிழக்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் குருநாகல், மொனராகல, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் வெப்பமான வானிலை நிலவும்.

13 மாவட்டங்களில் சில இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பமான நிலை நிலவக்கூடும். ஆகையால், இதனால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் சோர்வு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.