கட்டிலில் இருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!!

18

அனுராதபுரம், கெக்கிராவை பகுதியில் பெற்றோர்களுக்கு நடுவில் பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று, கட்டிலில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவமொன்று அரங்கேறியுள்ளது.

பெற்றோர்களுக்கு நடுவில் உறங்கிக் கொண்டிருந்த குறித்த குழந்தை, அதிகாலை வேளையில் எதிர்பாராத விதமாக கட்டிலில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளது.

சத்தம் கேட்டுப் பதறியெழுந்த பெற்றோர், உடனடியாகக் குழந்தையை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், தலையில் ஏற்பட்ட கடுமையான உட்புறக் காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கெக்கிராவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.